கடந்த 24 மணி நேரத்தில் ஜப்பானில் 90 பேருக்கு உருமாற்றம் அடைந்த கொரோனா உறுதி!

ஜப்பானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக 90 பேருக்கு உருமாற்றம் அடைந்த கொரானா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருட காலமாக உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்பொழுதும் குறையாத நிலையில் பல்வேறு நாடுகளில் இதற்கான தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கம் முற்றிலுமாக இன்னும் குறையாத நிலையில், அண்மையில் இங்கிலாந்தில் புதிய வகை உருமாற்றம் அடைந்த கொரோனாவும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா பழைய கொரோனா வைரஸை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருந்த நிலையில், இந்த கொரோனா வைரஸ் பிற நாடுகளுக்கும் தற்பொழுது பரவ ஆரம்பித்துள்ளது.
ஜப்பானில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்பொழுது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஜப்பானில் புதிதாக 90 பேருக்கு உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
குடும்பத்திற்காகக் கூட்டணி வைத்த இபிஎஸ் வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது! – ஆர்.எஸ்.பாரதி
April 28, 2025
செந்தில் பாலாஜிக்கு எந்த பதவியும் கொடுக்க கூடாது! உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!
April 28, 2025