பிலிப்பைன்ஸ் இராணுவ அதிகாரியை தாக்கிய கொரோனா!

Default Image

 கொரோனா பாதிப்பு முதலில் சீனாவில் தொடங்கி, தற்போது பல நாடுகளை தாக்கி வருகிற நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில், 707 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தாக்கிய ஒரு ராணுவ அதிகாரியை, பிலிப்பைன்ஸ் நாட்டில் இராணுவ தளபதி, பெலிமோன் சான்டோஸ் ஜூனியர் சந்தித்துள்ளார். இதனையடுத்து, இவர் 4 நாட்களாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இருப்பினும் இவருக்கு தற்போது, கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா உறுதி ஆனபோதிலும், அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படவில்லை. அவர் குடியிருக்கும் ராணுவ குடியிருப்பிலேயே அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். அவர் அங்கிருந்தே தனது பணிகளை கவனிப்பார் என்று பிலிப்பைன்ஸ் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.  

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்