இங்கிலாந்தில் மேலும் 29,520 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை பெருமளவு பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளை கடந்த ஜூலை 19 ஆம் தேதி அறிவித்தனர். இந்த தளர்வு நாட்டில் பெருமளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தற்போது இங்கிலாந்து நாட்டில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 29,520 பேருக்கு கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணத்தால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 62 லட்சத்தை தாண்டி உயர்ந்து வருகிறது. மேலும், கொரோனாவால் ஒரே நாளில் 93 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,30,894 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இங்கிலாந்தில் 13.13 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன்…