அமெரிக்காவில் 22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவிற்கு பலி.!

Default Image

உலகம் முழுக்க கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை 18 லட்சத்திற்கும் பொதுமக்களை கொரோனா பாதித்துள்ளது. இதனால், உலகில் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 

உலகம் முழுக்க கொரோனாவால் 18,64,555 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,15,099 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது. கொரோனாவில் இருந்து 4,33,823 பேர் மீண்டுள்ளனர். 

உலக வல்லரசு நாடாக அறியப்படும் அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அங்கு இதுவரை 5,60,433 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 22,115 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். 32,634 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்