னிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமணம் ஏற்படுத்திய சர்ச்சையை தொடர்ந்து டுவிட்டர் பக்கத்தில் இருந்து திடீரென வனிதா விலகியுள்ளார்.
வனிதாவின் மூன்றாவது திருமணம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வனிதாவின் கணவரான பீட்டர் பவுலின் முதல் மனைவி உட்பட அவரது மகன், லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் என பலர் குற்றஞ்சாட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர்.அனைவருக்கும் தனது ஸ்டைலில் வனிதா பதிலடி கொடுத்து வந்தார். இது குறித்து யூடியூப் சேனல்களில் நடந்த விவாதத்தை கண்ட ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவியது.
நேற்றைய தினம் கூட லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் வனிதா இடையிலான விவாதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் கஸ்தூரி மற்றும் வனிதா இருவரும் டுவிட்டரில் போட்டு கொண்ட சண்டையால் ஒருவருக்கொருவர் பிளாக் செய்து கொண்டனர். இந்த நிலையில் தற்போது வனிதாவின் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். ஆம் வனிதா விஜயகுமார் தனது டுவிட்டர் பக்கத்திலிருந்து திடீரென விலகியுள்ளார். தற்போது இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருவதோடு, இனி மேலாவது இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி கிடைக்குமா என்ற கேள்வியும், சற்று நிம்மதியும் இணையதள வாசிகளிடையே எழுந்துள்ளது.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…