னிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமணம் ஏற்படுத்திய சர்ச்சையை தொடர்ந்து டுவிட்டர் பக்கத்தில் இருந்து திடீரென வனிதா விலகியுள்ளார்.
வனிதாவின் மூன்றாவது திருமணம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வனிதாவின் கணவரான பீட்டர் பவுலின் முதல் மனைவி உட்பட அவரது மகன், லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் என பலர் குற்றஞ்சாட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர்.அனைவருக்கும் தனது ஸ்டைலில் வனிதா பதிலடி கொடுத்து வந்தார். இது குறித்து யூடியூப் சேனல்களில் நடந்த விவாதத்தை கண்ட ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவியது.
நேற்றைய தினம் கூட லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் வனிதா இடையிலான விவாதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் கஸ்தூரி மற்றும் வனிதா இருவரும் டுவிட்டரில் போட்டு கொண்ட சண்டையால் ஒருவருக்கொருவர் பிளாக் செய்து கொண்டனர். இந்த நிலையில் தற்போது வனிதாவின் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். ஆம் வனிதா விஜயகுமார் தனது டுவிட்டர் பக்கத்திலிருந்து திடீரென விலகியுள்ளார். தற்போது இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருவதோடு, இனி மேலாவது இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி கிடைக்குமா என்ற கேள்வியும், சற்று நிம்மதியும் இணையதள வாசிகளிடையே எழுந்துள்ளது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…