சர்ச்சையை ஏற்படுத்திய வனிதா-பீட்டர் பவுல் திருமணம்.!கோவத்தில் வனிதா எடுத்த அதிரடி முடிவு.! 

Default Image

னிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமணம் ஏற்படுத்திய சர்ச்சையை தொடர்ந்து டுவிட்டர் பக்கத்தில் இருந்து திடீரென வனிதா விலகியுள்ளார்.

வனிதாவின் மூன்றாவது திருமணம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வனிதாவின் கணவரான பீட்டர் பவுலின் முதல் மனைவி உட்பட அவரது மகன், லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் என பலர் குற்றஞ்சாட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர்.அனைவருக்கும் தனது ஸ்டைலில் வனிதா பதிலடி கொடுத்து வந்தார். இது குறித்து யூடியூப் சேனல்களில் நடந்த விவாதத்தை கண்ட ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவியது.

நேற்றைய தினம் கூட லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் வனிதா இடையிலான விவாதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் கஸ்தூரி மற்றும் வனிதா இருவரும் டுவிட்டரில் போட்டு கொண்ட சண்டையால் ஒருவருக்கொருவர் பிளாக் செய்து கொண்டனர். இந்த நிலையில் தற்போது வனிதாவின் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். ஆம் வனிதா விஜயகுமார் தனது டுவிட்டர் பக்கத்திலிருந்து திடீரென விலகியுள்ளார். தற்போது இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருவதோடு,  இனி மேலாவது இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி கிடைக்குமா என்ற கேள்வியும், சற்று நிம்மதியும் இணையதள வாசிகளிடையே எழுந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்