கொரோனா வைரசால் உலக நாடுகளில் தினமும் பாதிப்பும் , உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. அதிலும் அதிகமாக ஐரோப்பிய நாடுகள் கொரோனா கோரப்பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. அதில் இத்தாலி நாடும் ஒன்று.இங்கு கொரோனாவால் 143,626 பேர் பாதிக்கப்பட்டும் , 18,279 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் இத்தாலி அரசு திணறி வருகிறது. மருத்துவர்களின் தேவை அதிகரித்ததால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவருக்கு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதையெடுத்து கொரோனாவால் மருத்துவர்களின் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .
இதுவரை 100 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அங்கு ஏற்கனவே 30 மருத்துவ ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. 100 மருத்துவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா நோய்க்கு எதிராக போராடும் மருத்துவருக்கு உரிய உபகரணங்கள் கொடுக்கவேண்டும் என இத்தாலி சுகாதாரத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கு போதிய உபகரணங்கள் இன்றி போராட செய்வது , ஆயுதமின்றி போரிடுவதற்கு சமம் என இத்தாலிய அரசு குறிப்பிட்டுள்ளது.
திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…
டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…