இஸ்ரேலர்களுக்கு காசா முனையில் உள்ள ஹமாஸ் படையினருக்கும் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 109 ஹாமஸ் படையினரும் 7 இஸ்ரேலர்களும் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கு இடையே கடந்த பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், காசா முனையை ஆட்சி செய்து வரக்கூடிய ஹமாஸ் போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதி வருகிறது. இந்த ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேலர்களுக்கும் இடையே அடிக்கடி வான்வழி தாக்குதல் மூலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. கடந்த திங்கட்கிழமை அல்- அக்ஷா மத வழிபாட்டுத் தலத்தில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது.
இதனையடுத்து இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது காசா முனையிலிருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலியர்கள் பதிலடி தாக்குதல் நடத்தினர். இவ்வாறு இருவரும் மோதிக் கொண்டதில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்ததுடன், பலர் உயிரிழக்கவும் செய்தனர். இவ்வாறு இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த இரு தரப்பு மோதலில் இதுவரை மொத்தம் 116 பேர் உயிரிழந்துள்ளனராம். காஸாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்த 106 பேரும், இஸ்ரேலில் உள்ள ஏழு பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக சென்னையில் பயணிக்க, பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 'பிங்க் ஆட்டோ' சென்னை…
டெல்லி : ஜெர்மனியின் கார் தயாரிப்பு நிறுவனமான மெர்ஸிடஸ் பென்ஸ் (Mercedes-Benz) AMG G 63 எனும் புதிய வகை…
சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த…
கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு…
டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய…
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…