தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள க்யாகுல் நகரில் உள்ள மிகப் பெரிய சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 58 பேர் உயிரிழப்பு.
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள க்யாகுல் நகரில் மிகப் பெரிய சிறைச்சாலை ஒன்று உள்ளது. குற்ற செயல்கள் அதிகம் நடைபெறும் நகரங்களில் ஒன்றாக க்யாகுல் கருதப்படுகிறது. போதைப் பொருட்களை கடத்தி விநியோகம் செய்யும் 2 குழுக்கள் சிறைக்குள் சரமாரியாக மோதிக் கொண்டனர்.
சனிக்கிழமை காலையில் தொடங்கிய இந்த பயங்கர சண்டையில், இரு குழுக்களும், துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், கத்தி போன்றவற்றை பயன்படுத்தி தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் 58 கைதிகள் கொல்லப்பட்ட நிலையில், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காவல்துறையினர் தலையிட்டு இந்த மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கடந்த செப்டம்பரில் நடந்த இதேபோன்ற சம்பவத்தில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நடப்பாண்டில் மட்டும் 300-க்கும் அதிகமானோர் சிறை கலவரத்தில் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…