மங்காத்தாவை விட மாநாடு பெரிய படம் – வெங்கட் பிரபு..!!

Default Image

மங்காத்தாவை விட மாநாடு பெரிய படம் என்று இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். 

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

படத்திலிருந்து கடந்த 21 ஆம் தேதி மெர்ஸைலா என்ற பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாநாடு படக்குழுவினர் ட்விட்டர் ஸ்பேஸ் மூலமாக ரசிகர்களுடன் உரையாடல் நடித்தினர். சிம்பு, யுவன், வெங்கட் பிரபு, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.

அதில் மாநாடு திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு ” என்னுடைய சினிமா வாழ்க்கையில் மங்காத்தா திரைப்படத்தை விட இது பெரிய புராஜெக்ட். இந்தப்படம் அரசியல் திரைப்படம் என்றாலும் புதுசா ஒரு ஜானர்ல முயற்சி பண்ணிருக்கேன். எனக்கு தெரிஞ்ச ஜானர்ல அரசியலை இதுல சொல்லிருக்கிறேன்.. அதனால் மக்கள் எதிர்பார்க்கிற படமாகவும் அவர்கள் எதிர்பாராத ஒரு படமாகவும் இந்த மாநாடு இருக்கும்”என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்