100 கோடி சொத்தை அனுபவிக்க தனது மகளுக்கு போட்டு வைத்த கண்டிஷனால் தவிக்கும் பரிதாப நிலையில் மகள் இருக்கிறார்.
12 மில்லியன் டாலர் சொத்துக்கள் உடைய ஆஸ்திரேலியா கோடீஸ்வரர் ஒருவர் தனது சொத்துக்களை அனுபவிக்க கண்டிஷன் ஒன்றை எழுதிவைத்துள்ளார். தனது மகளான கிளாரா பிரவுனுக்கு தெரிவித்துள்ள கண்டிஷன் என்னவென்றால் கிளாரா ஒரு நிரந்தரமான வேலையை தேடிக்கொள்ள வேண்டும் என்பதாகும். மேலும், இதுதான் தந்தையின் கடைசி ஆசை என்றும் தெரிவித்துள்ளார். இதை செய்தால் மட்டுமே தன்னுடைய சொத்துக்கள் கிளாராவுக்கு சென்றடையும் என்று எழுதி வைத்துவிட்டு இறந்து விட்டார்.
கிளாராவுக்கு சிறிய வயதிலிருந்தே ஏடிஎச்டி என்ற கவனக்குறைவு பிரச்சனை இருக்கிறது. இதனால் தினமும் அவர் போராடி வருகின்றார். இந்நிலையில் பல்வேறு முயற்சி செய்தும் அவரால் ஒரு நிரந்தர வேலையை பெற முடியவில்லை. இதற்கு காரணம் இவருக்கு உள்ள இந்த பாதிப்புதான். மேலும் இவரால் கார் கூட ஓட்ட கற்றுக்கொள்ள முடியாது. இந்த நிலையில் அவரால் ஒரு நிரந்தர வேலையை தேடி பெற முடியவில்லை. இதன் காரணத்தால் மன உளைச்சலுக்கு ஆளான கிளாரா தனது தந்தை முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, என்னுடைய உரிமையை தயவுசெய்து எனக்கு கொடுங்கள். நான் மிகவும் பாதிப்படைந்து உள்ளேன். எவ்வளவு முயற்சி எடுத்தும் என்னால் நிரந்தர வேலையை பெற முடியவில்லை என அவருடைய குடும்பத்தாரிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அவருடைய தந்தை இறப்பதற்கு முன்பு கூட அவர் வாரம் 40,000 பெற்று வந்துள்ளார். அதையும் பல நேரங்களில் தராமல் இருந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கிளாரா தினசரி வேலைகளை செய்யவே சிரமப்பட்டு வருவதால் தன்னால் நிரந்தர வேலையை பெற முடியாது எனவும் தெரிவித்துள்ளார். அதனால் நீதிமன்றம் மூலமாகவாவது தனக்கு சரியான நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…