150 முறை வாய்ப்பு கேட்டும் தளபதி விஜய் மறுத்துவிட்டார் – ஜெய் வெளிப்படை பேச்சு.!

Default Image

விஜய்யுடன் நடிக்க 150 முறை வாய்ப்பு கேட்டும் மறுத்துவிட்டார் என நடிகர் ஜெய் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் விஜய்க்கு தம்பியாக பகவதி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஜெய். இவரது நடிப்பில் தற்போது பார்டி, சிவ சிவா, எண்ணித்துணிக ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. விரைவில் இதற்கான ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சில புதிய திரைப்படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த நிலையில், நேற்று சென்னையில், தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெய் கலந்து கொண்டுள்ளார்.

அதில் பேசிய ஜெய் கூறியதாவது ” விஜய் சாருடன் ‘பகவதி’ படத்தில் இணைந்து நடித்தது பெருமை. அதன்பிறகு அவரின் படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்காக இதுவரை அவரிடம் 150 முறை வாய்ப்பு கேட்டிருப்பேன். ஆனால், அவர்நீ தான் படங்களில் ஹீரோவாக நடித்து வர.. அப்புறம் ஏன்.. என்று கூறிவிட்டார் ” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்