நான் இந்த நிலைமைக்கு வர, தளபதி விஜய் தான் காரணம் : நடிகர் அருண்விஜய்

Default Image

நடிகர் அருண்விஜய் பிரபலமான இந்திய நடிகர் ஆவார். இவர் தமிழில் முறைமாப்பிள்ளை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான செக்க சிவந்த வானம், தடம் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘நான் சினிமாவில் நடிகராக திணறிய போது, சினிமா தயாரிப்பாளராக மாறி முன்னணி ஹீரோக்களை வைத்து படங்கள் எடுக்குமாறு குடும்பத்தினர் கூறினார்கள்.
இதனையடுத்து, நான் தளபதி விஜயை சந்தித்து பேச சென்றேன். அவரது முடிவை தளபதி விஜயிடம் கூறிய போது, ஏன் இப்படி ஒரு முடிவை எடுக்கிறீர்கள். நல்லா நடிக்கிறீங்க. லவ்லி டான்சர், சண்டை போடுறீங்க. தொடர்ந்து செய்ங்க. நிறுத்திடாதீங்க. என கூறியுள்ளார்.
இவரது இந்த நம்பிக்கையான பேச்சை சிறிது நேரம் யோசித்து பார்த்தேன். பின் வீட்டிற்கு வந்து நான் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறினேன். தளபதி விஜய் கொடுத்த அறிவுரை தான் என்னை தஹ்ரபோது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்க வைத்துள்ளது.’ என பெருமையாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்