நீளமான தலை முடி வளர சில இயற்கையான வழிமுறைகள் அறியலாம் வாருங்கள்..!

Published by
Rebekal

பெண்கள் பலரும் தங்களுக்கு நீளமான அடர்த்தியான கருமை நிறம் கொண்ட கூந்தல் வேண்டும் என விரும்புவது வழக்கமான ஒன்று தான். தற்போதைய காலத்தில் ஆண்களே முடி நீளமாக வளர்த்து மாடலாக இருக்க வேண்டும் என்று விரும்பும் நிலையில் பெண்கள் முடி இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்? பெண்கள் வீட்டிலேயே இயற்கையான சில குறிப்புகளை பயன்படுத்தி நீளமான கருமையான முடி வளர்வதற்கான வழிமுறைகள் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

கற்றாழை

நமது உடலில் உள்ள வெப்பம் தான் முடிவு உதிர்வுக்கு முக்கிய காரணம் ஆகிறது. இந்த வெப்பத்தை தணிப்பதற்கு முக்கிய பங்காற்றுவது கற்றாழை தான். கற்றாழையை நீளவாக்கில் வெட்டி அதன் உள்ளிருக்கும் ஜெல் பகுதியை உங்கள் உச்சந்தலையில் தடவி 40 நிமிடங்கள் கழித்துக் கூந்தலை அலசி விடுவதன் மூலம் கூந்தல் உடையாமல் பாதுகாப்பாக இருப்பதுடன் உடல் உஷ்ணத்தால் ஏற்படக் கூடிய முடி உதிர்வும் தவிர்க்கப்படுகிறது.

வெந்தயம்

பெரும்பாலும் நமது சமையலில் அதிகம் பயன்படுத்தப்பட கூடிய வெந்தயம் உடல் குளிர்ச்சிக்காக உணவுகளுடன் பயன்படுத்தப்படுகிறது. இந்த வெந்தயம் முடி உதிர்வை தவிர்ப்பதுடன், மீண்டும் முடி நன்றாக கருமையாக வளர்வதற்கு உதவி செய்கிறது. இந்த வெந்தயத்தை என்ன செய்ய வேண்டும் என்றால், இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் வெந்தயத்தை எடுத்து நன்றாக வறுத்து தூள் செய்து வைத்துக் கொள்ளவும். பின்பு இதை பேஸ்ட் போல குழைத்து நமது உச்சந்தலையில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து அதன் பின்னதாக நம் தலையை அலசி விட வேண்டும். இவ்வாறு நாம் தொடர்ந்து செய்து வருவதன் மூலமும் முடி உதிர்வு தவிர்க்கப்படும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் பெரும்பாலும் நாம் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தாலும், நமது முடி உதிர்வதற்கு காரணமான உடல் உஷ்ணத்தை தவிர்ப்பதற்கு தேங்காய் எண்ணையை லேசாக சூடு செய்து அதனை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்வதன் மூலம் கூந்தல் உதிர்வதைத் தடுக்க முடியும்.

குறிப்பாக நாம் குளிக்கும் பொழுது குளிர்ந்த நீரில் குளித்தால் நமது கூந்தல் உடைவு மற்றும் உதிர்வு பிரச்சினைகள் ஏற்படாது. காரணம் வெந்நீர் வைத்து குளிக்கும் பொழுது தான் நமது முடிகள் உதிரத் தொடங்குகிறது. குளிர்ந்த நீர் ரத்த ஓட்டத்தை தூண்டி முடி நீளமாக வளர்வதற்கு உதவுகிறது. எனவே முடிந்தவரை குளிர்ந்த நீரில் தலையை கழுவுங்கள்.

Published by
Rebekal

Recent Posts

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

11 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

32 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

35 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

1 hour ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

1 hour ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

2 hours ago