முகம் பளபளப்பாக மாற சில இயற்கையான குறிப்புகள் அறியலாம் வாருங்கள்!

Default Image
பொதுவாகவே பெண்கள் தங்களது முகம் அழகாக பளபளப்பாக இருக்கவேண்டும் என்று நினைப்பது வழக்கம். ஆனால் அதற்காக செயற்கையான கிரீம்களை உபயோகித்து இருக்கும் அழகையும் கெடுத்துக் கொள்வதை விட இயற்கை நமக்கு கொடுத்துள்ள வரங்களாகிய சில முக்கியமான பொருட்களை வைத்து எவ்வாறு இயற்கை அழகை அடையலாம் என்பது குறித்து இன்று பார்க்கலாம்.

இயற்கையான முக அழகு பெற

முதலில் குளிர்ச்சி தன்மையுடைய கற்றாழை நமது முகத்துக்கு மிகவும் நல்லது. இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு முகத்தில் கற்றாழை தடவி விட்டு காலையில் எழுந்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவும் போது முகத்திற்கு புத்துணர்ச்சியும், அழகும் உருவாகும். அதுபோல விட்டமின் இ எனும் கடையில் விற்கக்கூடிய மாத்திரை வடிவிலான எண்ணெயை எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு காலையில் எழுந்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவும் போதும் முகம் பளபளப்பாகும். அதுபோல தயிர் மற்றும் கடலைமாவு ஆகிய இரண்டையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் மட்டும் வைத்திருந்து கழுவி வர முகம் பளபளப்பாகும்.
அதுபோல தேன் மற்றும் காபி தூள் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து 5 நிமிடம் விட்டு கழுவி வர முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து கரும்புள்ளிகள் மறைந்து முகம் அழகு பெறும். மேலும் வெள்ளரிக்காயில் உள்ள அதிக அளவு ஈரப்பதம் காரணமாக முகத்தில் அரைத்துத் தடவுவதால், முகம் பொலிவுடன் காணப்படும். அதுபோல பாதாம் எண்ணெயை வைத்து முகத்திற்கு இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு மசாஜ் செய்வது மிகவும் நல்லது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

England Captain Jos Butler - Ravi shastri
TN CM MK Stalin - BJP State president Annamalai
ADMK Former minister Sengottaiyan - ADMK Chief secretary Edappadi palanisamy
India vs England 3rd ODI
Kingdom - Vijay Deverakonda
Sunita Williams