மாலை நேரத்தில் டீ, காபி குடிக்கும் பொழுது ஏதாவது மொறுமொறுப்பாக, சூடாக சாப்பிடுவது எல்லோருக்குமே பிடிக்கும். இதற்காக நாம் கடையில் சென்று பணம் கொடுத்து வாங்கி சாப்பிடுவது திருப்தியளிக்காது. ஆனால் வீட்டிலேயே ஏதாவது செய்து சாப்பிட்டால் அனைவருக்கும் போதுமான அளவு சாப்பிட கூடிய அளவிற்கு நாம் தயார் செய்யலாம். இன்று நாம் சோயாவை வைத்து எப்படி அட்டகாசமான பக்கோடா செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்க
அவித்தல் : முதலில் சோயா உருண்டைகளை வெந்நீரில் சேர்த்து, இதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து ஒரு 15 நிமிடம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். பின் இதனை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
கலவை : ஒரு பாத்திரத்தில் அரைத்த சோயா உருண்டைகளை சேர்த்து இதனுடன் வெங்காயம், துருவிய கோஸ், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், மிளகாய் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு கடலைமாவு சேர்த்து நன்றாக தண்ணீர்விட்டு பிசைந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பொரித்தல் : ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி, எண்ணெய் நன்கு கொதித்ததும், சிறு சிறு உருண்டைகளாக எடுத்து பொன்னிறமாக பொரித்து எடுத்துக்கொள்ளவும். அவ்வளவுதான் அட்டகாசமான ஆரோக்கியமான மாலை நேர ஸ்நாக்ஸ் தயார்.
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…