மலை இலந்தையின் மருத்துவ குணங்கள் குறித்து அறியலாம் வாருங்கள்!

Published by
Rebekal

இலந்தை பழம் என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதிலும் இனிப்பு கலந்த லேசான புளிப்பு சுவையுடன் இருக்க கூடிய மலை இலந்தைப் பழம் பலருக்கும் பிடிக்கும். ஆனால் அதன் மருத்துவ குணங்கள் தெரியாது, அவற்றைக் குறித்து இன்று நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

மலை இலந்தையின் மருத்துவ குணங்கள்

சீனாவை பிறப்பிடமாகக் கொண்டு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே மருந்தாக பயன்பட்டு வரக்கூடிய மலை இலந்தை பழத்தில் வைட்டமின் ஏ, சி, பி3, பி6 ஆகியவையும் இரும்பு, தாமிரம், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் கார்போஹைட்ரேட் மற்றும் அதிக அளவில் புரதமும் காணப்படுகிறது. இதில் பழம் மட்டுமல்லாமல் வேர், இலை, பட்டை என அனைத்துமே மருந்தாக பயன்படுகிறது. இதை சாப்பிடும் போது மன அமைதி ஏற்படுவதுடன் இரவு நேரத்தில் தூக்கமின்றி தவிப்பவர்களுக்கு சிறந்த மருந்தாக அமையும். மேலும் இந்த பழத்தை சாப்பிடும் பொழுது உடலின் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரித்து உடலின் ரத்த ஓட்டம் சீராக உதவுகிறது. எலும்பு தேய்மானம் ஏற்படுபவர்கள் இந்த மலை இழந்த பழத்தை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளலாம். இதில் உள்ள கால்சியம் சத்து காரணமாக எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்கிறது.

மேலும் குடல் பகுதி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதுடன் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இதில் வைட்டமின்கள் அதிகம் காணப்படுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தருவதுடன் உடல் உஷ்ணத்தைப் போக்கி உடலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. வாந்தி தலைசுற்றல் ஏற்படக்கூடிய நேரங்களில் இலந்தை பழத்தை சாப்பிடும் பொழுது நிச்சயம் உடல் ஆரோக்கிய நிலையில் இருக்கும். மேலும் பெண்களின் மாதவிலக்கு நேரங்களில் ஏற்படக்கூடிய வயிற்று வலிகளை தடுக்கவும் இது பயன்படுகிறது. சர்க்கரை அளவினை அதிகரிக்க செய்யும், எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் சற்று குறைவாக எடுத்துக் கொள்ளலாம். ஆப்பிள் திராட்சை ஆகிய பழங்களை விலை கொடுத்து வாங்கி உண்பதை விட குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய இலந்தைப் பழத்தை சாப்பிடும் பொழுது இதில் அந்த பழங்களைக் காட்டிலும் அதிக சத்து காணப்படுகிறது.

Published by
Rebekal

Recent Posts

“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!

“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!

கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…

18 minutes ago

காஷ்மீர் பயங்கரவாதிகள் ‘சுதந்திரப் போராளிகள்’.., புகழ்ந்து பேசிய பாக்., துணைப் பிரதமர்.!

இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…

46 minutes ago

லஷ்கர் – இ – தொய்பா தளபதி சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!

பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…

1 hour ago

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

4 hours ago

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

4 hours ago

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.., பதிலடி கொடுக்கும் இந்தியா.!

காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…

5 hours ago