ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படக்கூடிய ஆப்பிள் வகையைச் சேர்ந்த பேரிக்காய் அதிக அளவு சத்து கொண்டது. இதில் புரதம், மாவுப்பொருள், கால்சியம் பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு சத்து, நார்ப்பொருட்கள், மெக்னீஷியம், சோடியம், தாமிரம், கந்தகம், குளோரின் ஆகிய பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த பேரிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
நார்ச் சத்து அதிகம் நிறைந்து உள்ளதால் இந்த பேரிக்காய் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைப்பதுடன், இதில் உள்ள பிளவனாய்ட்ஸ் மற்றும் ரசாயனங்கள் காரணமாக இன்சுலின் அளவை உடலில் மேம்படுத்துகிறது. மேலும் மலச்சிக்கல் வராமலும், குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமலும் பாதுகாக்கிறது. இந்த பேரிக்காயில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் காரணமாக எலும்பு வளர்ச்சிக்கு இது மிகவும் உதவுகிறது. மேலும் வாரம் இருமுறை இந்த பேரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைந்து ரத்த ஓட்டம் சீராக மாறுவதுடன் சுத்திகரிக்கப்பட்ட ரத்தம் உடலில் அதிகம் இருக்கும்.
மேலும் அஜீரண கோளாறுகளை போக்குவதில் பேரிக்காய் மிகவும் அதிக ஆற்றல் கொண்டது. குடல் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன் பேரிக்காய் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வரும் பொழுது மன இறுக்கம் மற்றும் சோர்வு நீங்கி உடல் புத்துணர்ச்சியுடன் காணப்படும். வைட்டமின்கள் மற்றும் புரதசத்து காரணமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய தன்மையை இது கொண்டுள்ளது. கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக்க, பற்களுக்கு உறுதியை அளிக்க, மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கும் சீரான உடல் நிலையை கொடுக்க இது உதவுகிறது. நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள் இந்த பேரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…