மக்கள் கொண்டாடும் தலைவி… தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா.?

Default Image

தலைவி படம் மூன்று நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தலைவி. இந்த திரைப்படம் கடந்த 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமியும், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் நடித்துள்ளார்கள்.

வெளியான நாளிலிருந்து இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. மூன்று மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் இணயத்தில் பரவி வருகிறது.

அதாவது வெளியான மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் 2.8கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் நாளுக்கு நாள் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்