நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தில் பிசியாக இருப்பதால் அவர் இல்லாத காட்சிகளை படமாக்க கோப்ரா படத்தின் படக்குழு ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு சென்றுள்ளார்கள்.
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கோப்ரா.ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் விக்ரம் பல வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த படத்தை இமைக்கா நொடிகள் என்ற வெற்றி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்க 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
படத்திலிருந்து முதல் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து படத்தில் நடிகை ஸ்ரீநிதிஷெட்டி இடம்பெற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் படத்தின் முழு படப்பிடிப்பு முடிக்க தற்போது கோப்ரா படத்தின் படக்குழு ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு சென்று படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.
மேலும் விக்ரம் இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள வாய்ப்பில்லைஏனெனில், விக்ரம் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருவதால் பிசியாக உள்ளார். அதுவரை கோப்ரா படக்குழு விக்ரம் இல்லாத காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் பொன்னியின் செல்வன் படத்திற்கான படப்பிடிப்பை முடித்து கொடுத்துவிட்டு கோப்ரா படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…