முதல் எதிரி தெலங்கானாவிற்கு காங்கிரஸ்தான்!

Default Image

தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தெலங்கானாவுக்கு முதல் எதிரி காங்கிரஸ் கட்சி தான் என தெரிவித்துள்ளார். தெலங்கானா சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் சந்திரசேகர ராவ், 1956ஆம் ஆண்டில் இருந்து தெலங்கானா மாநிலத்தை அழிவுப் பாதைக்குக் கொண்டுசென்றது காங்கிரஸ் கட்சிதான் என்றும், அதனால் தெலங்கானாவின் முதல் எதிரி காங்கிரஸ்தான் என்றும் தெரிவித்தார்.

நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அரசியல் ஆதாயத்துக்காகத் தெலங்கானாவை ஆந்திரமாநிலத்துடன் இணைத்துவிட்டதாகவும், இதற்கு அப்போதைய உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவளித்ததாகவும் குறிப்பிட்டார். 2001ஆம் ஆண்டிலேயே தெலுங்கானா பகுதியின் சிக்கல்களைத் தான் எடுத்துக் கூறிய போதிலும் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்