புதுச்சேரி மாநில பள்ளி கல்வி இயக்ககம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் `நவீன கால கற்பித்தலின் பரிணாமம், சவால்கள் மற்றும் வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தியல் கூட்டம் புதனன்று நடந்தது. இந்நிகழ்ச்சியை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். அப்போது அவர் அந்த நிகழ்ச்சியில், புதுவையில் கடந்த 2016ம் ஆண்டில் புதிய தொழிற்கொள்கையை கொண்டுவந்தோம். அதுமட்டுமில்லாமல் பெட்ரோல், டீசல் வாகனங்களால் காற்று மாசு ஏற்படுவதை தடுக்க, காற்று மாசு ஏற்படுத்தாத மின்சார வாகனங்களை இயக்குவதற்கு அந்த கொள்கையில் சலுகை வழங்கவும் நடவடிக்கை எடுத்தோம். இதனால் 500 தொழிற்சாலைகள் சென்னையில் இருந்து புதுச்சேரி வரவுள்ளது. ஆனால் நமது கவர்னர் கொடுக்கும் தொல்லையால் இரவில் எனக்கு தூக்கம் வருவதில்லை. புதுவையில் எந்த வேலையும் நடக்கக்கூடாது என்று தடுக்கும் ஒரு கூட்டம் உள்ளது. நான், அதிகாரிகளையும் சேர்த்துத்தான் சொல்கின்றேன் என்றார். மேலும், டெல்லி மற்றும் கவர்னர் தொல்லையை மீறி மத்திய அரசிடமிருந்து சிறப்பான நிர்வாகம் மனிதவள மேம்பாட்டிற்கும் விருது வாங்கியுள்ளோம். நமது கைகள் கட்டப்பட்டு உள்ள நிலையிலேயே இவ்வளவு என்றால்,எங்களை சுதந்திரமாக விடப்பட்டிருந்தால் புதுவையை எப்படி முன்னேறியிருக்கலாம். புதுச்சேரியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வாய்ப்பும், சூழல் உள்ளது. நிதி தேவைப்படுகிறது. மத்திய அரசு நமக்கு தர வேண்டிய நிதியை கூட கடந்த 3 ஆண்டுகளாக தரவில்லை. என்று சற்று காட்டமாக குறிப்பிட்டார்..
டெல்லி : வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக,…
ராமேஸ்வரம் : புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…