ராகவா லாரன்ஸின் நிதியுதவியால் பயனடைந்த தூய்மை பணியாளர்கள்.!

Published by
Ragi

ராகவா லாரன்ஸ், 3385 தூய்மை பணியாளர்களுக்கு 25 லட்சத்தை நிதியுதவியாக வழங்கி உதவியுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமாக நிதியுதவி வழங்கியவர் ராகவா லாரன்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே. இதுவரை 4 கோடிக்கு மேல் நிதியுதவி வழங்கியுள்ளார். இவர் ஏற்கனவே தான் நடிக்கும் அடுத்த படத்தின் தயாரிப்பாளரான கதிரேசனிடம் தனக்கு தர வேண்டிய சம்பளத்தில் ரூ. 25 லட்சத்தை தூய்மை பணியாளர்களுக்கு வழங்குமாறும், அதனை நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கோரியும் கேட்டதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் கதிரேசன் ராகவா லாரன்ஸ் அவர்களின் கோரிக்கையின் படி,ரூ. 25 லட்சத்தை 3385 தூய்மை பணியாளர்களுக்கு வழங்கியதாக அறிவித்துள்ளார். அவர் ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு எழுதிய அறிக்கையில் கூறியதாவது, தனது சம்பளத்தில் 25 லட்சம் ரூபாயினை தூய்மை பணியாளர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் நேரிடையாக செலுத்தி விடுமாறு தாங்கள் கேட்டு கொண்டதன்படி 3385தூய்மை பணியாளர்களின் அடையாள அட்டையின் பெயரில் இருக்கும் வங்கி கணக்குகள் உறுதி செய்யப்பட்டு, அனைவரின் வங்கி கணக்கிலும் பணம் சென்றடைந்து விட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அதனுடன் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்றும், எத்தனை பேருக்கு கொடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.தற்போது ராகவா லாரன்ஸ் தயாரிப்பாளர் கதிரேசன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். தற்போது ராகவா லாரன்ஸிற்கு தூய்மை பணியாளர்கள் அனைவரும் தங்களது நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.

 </p

Published by
Ragi

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

13 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

21 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 days ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 days ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 days ago