ஆஸ்திரேலியாவின் குடியுரிமை மற்ற நாடுகளை விட இந்தியாவுக்கு தான் அதிகம்!

Published by
Rebekal

ஆஸ்திரேலியாவில் இந்திய நாட்டு மக்களுக்கு தான் குடியுரிமை வழங்குவதில் அதிகம் முன்னுரிமை வழங்கப்படுகிறதாம்.

ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு சென்று, பல்வேறு காரணங்களால் அந்த நாட்டு குடியுரிமை பெற வேண்டும் என விண்ணப்பம் செய்பவர்கள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நார்வே பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் குடியுரிமை கோரி பல லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2019 முதல் 2020 வரை உள்ள ஆஸ்திரேலிய அகதிகள் இரண்டு லட்சம் பேருக்கு இந்த வருடம் ஆஸ்திரேலியக் குடியுரிமை கொடுத்துள்ளது.
இதில் 38,209 பேர் இந்தியர்கள் தானாம், கடந்த ஆண்டை காட்டிலும் 60 சதவீதம் இந்தியர்கள் அதிகமாக இந்த ஆண்டு குடியுரிமை பெற்றுள்ளனர். இதுகுறித்து அந்நாட்டின் குடியுரிமை மற்றும் கலாச்சார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் ஆலன் டுட்ஜ் அவர்கள் கூறுகையில், வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற விரும்புவதற்கான காரணம் அவர்கள் இந்த நாட்டின் மீது கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் மதிப்பீடுதான். கொரோனா  காலகட்டத்திலும் குடியுரிமை சேவை அமைச்சகம் ஆன்லைன் மூலம் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குடியுரிமை வழங்கி உள்ளது என அவர் கூறியுள்ளார்.
Published by
Rebekal

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

6 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

7 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

8 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

8 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

8 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

9 hours ago