பொன்னியின் செல்வன் படத்தில் பணியாற்றியது குறித்து நடன இயக்குனர் பிருந்தா பகிர்ந்துள்ளார்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம், அமிதாப் பச்சன், சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, நடிகை கீர்த்தி சுரேஷ், நயன்தாரா,அனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ரஹ்மான், ஜெயராம் போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.
இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பானது கடந்தாண்டு தாய்லாந்தில் வைத்து தொடங்கப்பட்டது.அதன் பின் கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்ட படத்தின் படப்பிடிப்பை ஜனவரியில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து மீண்டும் தொடங்கப்பட்டது.அந்த படப்பிடிப்பில் கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ரஹ்மான், பார்த்திபன் உள்ளிட்ட ஒரு சில நடிகர், நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர் .
தற்போது பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில் பொன்னியின் செல்வன் படத்திற்கு நடன இயக்குனர் பிருந்தா பணியாற்றி வருகிறார் . இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பிருந்தா,எனது கனவு குழு பொன்னியின் செல்வன்.எனது குரு மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் பணியாற்றியதில் மகிழ்ச்சி.அவர் உண்மையான மேதை.ரவி வர்மனின் ஒளிப்பதிவில். அனைத்து காட்சிகள் மிகவும் அருமையாக வந்துள்ளது.அனைவரையும் தூண்டும் அளவிற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை அமைந்துள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் பாடலில் நடனம் அமைத்ததில் மேலும் மகிழ்ச்சி.எனது பின்பலம் என் உதவியாளர்கள் என்றும் , கடைசியாக என் பலம் என் நடனக்குழுதான்’ என்று புகைப்படத்துடன் பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார்.
துபாய் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்படவுள்ளது. முதல் போட்டியானது நடப்பு சாம்பியன்…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் (தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்)…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள்…
சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுக்குழு கூட்டமானது வரும் மார்ச் 28ஆம் தேதியன்று (அடுத்த வார…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமை…
சென்னை : தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளதாக இன்றைய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…