சியான் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் பல நாட்களாக கிடப்பில் கிடந்த துருவ நட்சத்திரம் படத்தின் டப்பிங்கை விக்ரம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.
விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இதில் விக்ரம் ஏழு வேடங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை அஜய் ஞானமுத்து இயக்கி ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் நடிக்கிறார். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கவுள்ளார் விக்ரம். மேலும் விக்ரம் – 60 படத்திலும் தனது மகனான துருவ் விக்ரமுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கவுள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும் இவரது நடிப்பில் உருவாகி வரும் துருவ நட்சத்திரம் படம் பல மாதங்களாக கிடப்பில் உள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் கௌதம் மேனன் மற்றும் ஈஷாரி கணேஷ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தினை குறித்து சமீபத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் அளித்த பேட்டி ஒன்றில், இந்த படத்தினை விரைவில் செய்வதற்காக தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், இதற்காக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி இருப்பதாகவும், இன்னும் சில நாட்களில் இந்த படத்திற்கான டப்பிங்கை விக்ரம் அவர்கள் செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் லாக்டவுன் முடிந்ததும் 2 நாட்கள் படப்பிடிப்பை முடித்து விட்டு ரிலீஸ் செய்வதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…