அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்று அதிபரானால், அமெரிக்காவை சீனர்கள் சொந்தமாக்கிக் கொள்வார்கள் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அங்கு கொரோனாவைப் பற்றி பேசுவதை விட, நவம்பர் மாதம் 3-ம் தேதி நடக்கவுள்ள அதிபர் தேர்தலை பற்றி பேசும் பேச்சுக்களேஅதிகளவில் உள்ளது. இதன்காரணமாக, அங்கு தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். அதனை அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக ஜோ பைடன் போட்டியிடுகிறார். துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 85 நாட்களுக்கும் குறைவே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. இந்தநிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், நவம்பர் மாதம் நடக்கும் அதிபர் தேர்தல் அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இருக்கும் என தெரிவித்த டிரம்ப், இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் வாக்குகளைத் திருடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
மேலும் பேசிய அவர், கடந்த முறை தேர்தலில் உளவு பார்த்தார்கள் எனவும், இந்த முறை மின்னஞ்சல் வாக்குகளைத் திருட முயல்கிறதாக கூறிய அவர், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றிபெற்று ஜோ பிடன் அதிபரானால், அமெரிக்காவை சீனர்கள் சொந்தமாக்கிக் கொள்வார்கள் என தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் அமெரிக்காவில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், மக்கள் அதனை ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…