கொரோனாவுக்கு பிறகு திறக்கப்பட்ட சீன பூங்காவில் தீ விபத்து ஏற்பட்டதால், 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸால் தற்பொழுது உலகமே திக்குமுக்காடிய நிலையில் உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவில் தற்போது குறைந்துவிட்டது. இந்நிலையில் பழைய நிலைமைக்கு கொஞ்சம் கொஞ்சமாக சீனா திரும்பி வருகிறது. இதனை தொடர்ந்து சீனாவில் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள தையுவான் நகரின் புறநகரில் உள்ள டைட்டாய்சன் தீம் பூங்காவில் நேற்று பனி விளக்குகள் மற்றும் பணி சிற்பங்களின் கண்காட்சி மண்டபம் நடைபெற்றுள்ளது. இந்த மண்டபத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் சுற்றுலா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் அதிகம் பாதிப்படைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் விதமாக எட்டு நாட்கள் சுற்றுலா விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிகளவில் பயணிப்பார்கள் பொருளாதாரத்திற்கு சற்றே ஊக்கமளித்த வகையில் இருக்கும் என நினைத்த நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது மிகப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்து தொடர்பாக தேசிய அளவிலான மாநில கவுன்சிலிங் பணி பாதுகாப்பு குழு மேற்பார்வையில் ஈடுபட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…