1000 வருடங்கள் பழமையான புத்த சிலையை ஒப்படைக்க உத்தரவு

Default Image

தென்கிழக்கு மாகாணமான புஜியனில் உள்ள யாங்சூன் என்ற கிராமத்தில் வசிப்பவர்கள், இந்த சிலை 1,000 வருட பழமையான நினைவுச்சின்னம், இது கடந்த 1995 -ஆம் ஆண்டில் காணாமல் போனது என்று தெரிவித்தனர் . டச்சுவை  சேர்ந்த சிலை சேகரிப்பாளர் 1996 ஆம் ஆண்டில் ஹாங்காங்கில் இந்த பொருளை வாங்கியதாக கூறுகிறார், ஆனால் அது திருடப்பட்ட சிலை என்பதை மறுத்துள்ளார்.

சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி சீன கலை மற்றும் கலைப்பொருட்கள் மீட்கப்படுவதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டு வருகிறது.ஆஸ்கர் வான் ஓவரீம் (Oscar van Overeem) சிலையை 30 நாட்களுக்குள் திருப்பி அளிக்க வேண்டும் என்று சான்மிங் மக்கள் நீதிமன்றம் சிலை சேகரிப்பாளர் உத்தரவிட்டுள்ளது என சின்ஹுவா செய்தி (Xinhua News Agency) நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிராமவாசிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு குழுக்கள் 2017 -ஆம் ஆண்டு டச்சு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.ஆனால் இந்த வழக்கில் இந்த ஆண்டு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.அதாவது ,தீர்ப்பில் கோயில் மற்றும் அதன் நினைவுச்சின்னங்கள் கூட்டாக யாங்சுன் மற்றும் டோங்பூ கிராமங்களுக்குச் சொந்தமானவை என்பதைக் கண்டறிந்தன. சிலை திரும்பக் கோருவதற்கு ஒரு குழுவாக குடியிருப்பாளர்களுக்கு தீர்ப்பில்  உரிமை அளித்ததாக சின்ஹுவா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் காணாமல் போன சிலையில் சாங் வம்சத்தின் போது நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் புகழ் பெற்ற ஜாங் காங் சுஷி அல்லது தேசபக்தர் ஜாங் காங்கின் எச்சங்கள் உள்ளன என்று கிராமவாசிகள் கூறுகின்றனர். 2015 ஆம் ஆண்டில் ஹங்கேரியில் ஒரு கண்காட்சியில் தோன்றிய பின்னர் காணாமல் போன சிலையை டச்சு சேகரிப்பாளரிடம் கண்டுபிடித்ததாக கிராமவாசிகள் கூறுகின்றனர் என்று சின்ஹுவா நிறுவனம் தெரிவித்துள்ளது.சிலை சேகரிப்பாளருடனான பேச்சுவார்த்தைகள் முறிந்த பின்னர், அவர்கள் அடையாளம் காணப்பட்ட ஒரு நபரின் உடலின் உரிமையை தடைசெய்யும் டச்சு சட்டத்தை மேற்கோள் காட்டி வழக்குத் தாக்கல் செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்