சீனாவில் டோயின் என்ற டிக்டாக் செயலியில் பிரபலமான பெயர் லாமு. இவர் சிச்சுவான் மாகாணத்தின் கிராமிய வாழ்க்கை தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வந்தார். மேக்கப் இல்லாமல் இயல்பாக தோன்றும் லாமுவுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. சமூகவலைதள பக்கத்தில், அவரை 7,82,000 பேர் பின்தொடர்கின்றார்கள்.
இந்நிலையில், லாமுவை அவரது முன்னாள் கணவர் உயிருடன் எரித்துக்கொன்ற சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைதளத்தில் வெளியிடுவதற்காக வீடியோவைப் பதிவு செய்துகொண்டிருந்தபோது அவரது குடும்பத்தினரின் கண் எதிரே, அவரது முன்னாள் கணவர் இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார்.
லாமு தொடர்ந்து பல நாள்கள் குடும்ப வன்முறையில் ஈடுபட்டுவந்த கணவனுக்கு எதிராக, விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தார். இருவரிடமும் தலா ஒரு குழந்தை வளர்ந்து வந்துள்ளனர். பின்னர், தன்னுடன் சேர்ந்து வாழாவிட்டால் குழந்தையைக் கொன்றுவிடுவதாக முன்னாள் கணவர் மிரட்டியுள்ளார். இவ்வாறு இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு வந்த நிலையில், இப்பெண் உயிரிழப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன், 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன்வசம் கொண்ட லாமுவுக்கு, இப்படி ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…
ஹைதராபாத் : நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோதியது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்…
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…