நேபாள் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் பிரசண்டாவை சந்தித்த சீனத் தூதர்..!

Published by
murugan

நேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் இரு தலைவர்களான கே.பி சர்மா ஒலி  மற்றும் முன்னாள் பிரதமர் புஷ்பா கமல் தஹால் ‘பிரசண்டா’ இடையே அதிகார மோதல் நிலவி வந்தது. இந்நிலையில் சமீபத்தில் கே.பி சர்மா ஒலி  நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை முன்கூட்டியே நடத்த ஜனாதிபதி  பித்யா தேவி பண்டாரியிடம் பரிந்துரைத்தார்.

இதை ஏற்ற ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி அடுத்த ஆண்டு மே மாதத்தில் தேர்தல் நடத்த உத்தரவிட்டார். இதற்கிடையில் ஆளும் கட்சியிலே கடும் எதிர்ப்பு கிளம்பியது. முதற்கட்டமாக கட்சித் தலைவர் பதவியிலிருந்து கே.பி சர்மா ஒலி அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மாதவ் குமார் புதிய தலைவராக கட்சியின் மத்திய குழு நியமித்தது.

இந்நிலையில், இன்று நேபாளத்துக்கான சீனத் தூதர் ஹூ யான்கி ஆளும் நேபாள புஷ்பா பிரசண்டாவை அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்ததாகவும், நேபாளத்தின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து விவாதித்ததாகவும் புஷ்ப் கமல் தஹலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் இருதரப்பு அக்கறை தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக பிரச்சந்தாவின் நெருங்கிய தலைவர் விஷ்ணு ரிசால் தெரிவித்துள்ளார். நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி பாராளுமன்றத்தை கலைத்து இடைக்கால தேர்தல் நடத்த முடிவு செய்திருப்பது சீனாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் ஆய்வாளர்கள் கூறுகையில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு பிரிவுகளாகப் பிரிந்துவிட்டது, தேர்தலுக்கு முன்னர் பிரிந்து போகக்கூடும். நேபாள கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்தால், நேபாளி காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள்.

இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவதற்கு நேபாளி காங்கிரஸ் நீண்டகாலமாக ஆதரவளித்து வருகிறது. சீனாவின் உத்தரவின் பேரில் ஓலி அரசு செயல்பட்டு வந்ததாகவும், நேபாள அரசின் செயல்பாட்டில் கணிசமான சீன தலையீடு இருந்தது எனவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் இந்தியாவின் எல்லைப் பகுதியை இணைத்து நேபாள அரசு புதிய வரைபடத்தை வெளியிட்டது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவுடன் மோதல் போக்கை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு கண்டித்தது. சீனாவின் உத்தரவின் பேரில் இந்த புதிய வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது எனவும் கூறப்படுகிறது.

நேபாளம் பிரதமர் கே.பி. சர்மா ஓலிக்கு பதிலாக தஹால் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றத் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
murugan

Recent Posts

தோனி இருக்கும் வரை சென்னை ஆதிக்கம் தான்! லக்னோ பயிற்சியாளர் ஜாகீர் கான் பேச்சு!

தோனி இருக்கும் வரை சென்னை ஆதிக்கம் தான்! லக்னோ பயிற்சியாளர் ஜாகீர் கான் பேச்சு!

சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…

6 hours ago

“மறு ஆய்வு செய்யணும்”…இரட்டை இலை விவகாரத்தில் அ.தி.மு.க அதிரடி மனு..!

சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது.  எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…

8 hours ago

“மாஸ் மட்டுமில்லை…அதுவும் இருக்கு” குட் பேட் அக்லி குறித்து உண்மையை உடைத்த ஆதிக்!

சென்னை :  அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…

8 hours ago

நாங்க போலீஸ் பேசுறோம்..82 வயது மூதாட்டியிடம் ரூ.20 கோடியை சுருட்டிய கும்பல்…3 பேர் அதிரடி கைது!

மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…

9 hours ago

டி-ஷர்ட் அணிய தடையா? இதுதான் அவர்கள் கொடுக்கும் மரியாதை! கனிமொழி பேட்டி!

டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…

10 hours ago

தமிழ்நாட்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தகவல்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…

10 hours ago