ரகசிய ஆயுதம் பயன்படுத்திய சீனா! மறுப்பு தெரிவிக்கும் இந்தியா!

Published by
லீனா

இந்திய வீரர்களை பின்வாங்க செய்ய, மின்காந்த அலைகளை, சீனா ஆயுதமாக பயன்படுத்தி உள்ளது.

லடாக் எல்லையில், கடந்த சில மாதங்காளாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சீனா-இந்திய ராணுவ வீரர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், இந்த மோதலில் பல இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து, பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின், மெதுமெதுவாக பதற்றநிலை தணிந்து வருகிறது.

இந்நிலையில், பெய்ஜிங்கில் நடந்த மாணவர்கள் மாநாட்டில் பேசிய சர்வதேச ஆய்வு நிபுணர்,  ஜின் கேன்ராங், லடாக் எல்லையில், இந்திய வீரர்களை பின்வாங்க செய்ய, மின்காந்த அலைகளை, சீனா ஆயுதமாக பயன்படுத்தியதாக கூறினார். பழைய ஒப்பந்தப்படி இருநாட்டு வீரர்களும், துப்பாக்கி பயன்படுத்த தடை உள்ளதால், சீனா ரகசியமாக இந்த ஆயுதத்தை உபயோகித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த மின்காந்த அலையின் பாதிப்பு என்னவென்றால், இந்த மின் காந்த அலைகள் மனிதனுடைய சதையை ஊடுருவி, நீர்சத்து குறைத்துவிடும் தன்மை கொண்டவை என கூறிய அவர், வலியே இல்லாமல் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக இந்திய வீரர்காளுக்கு உடல் வெப்ப நிலையில் மாற்றம், வாந்தி மற்றும் சோர்வு போன்றவை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். சீன இந்த நுண் அலை ஆயுதத்தை தற்போது தான் பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார். இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர், இதனை கடுமையாக மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது ஒரு போலியான மற்றும் நகைசுவையான கூற்று என்றும் தெரிவித்துள்ளார். இது எல்லையை தாண்டி தொடரும் உளவியல் நடவடிக்கைகளில் ஒருபகுதி என்றும் தெரிவித்துள்ளார்.

சாதாரணமாக மனித உடல், 8 பாரன்ஹீட் வெப்பநிலையில் இருக்கும் நிலையில், சீனா பயன்படுத்தியதாக கூறப்படும் மின்காந்த அலைகள், மனித உடலின் வெப்பநிலையை 130 பாரன்ஹீட் அளவிற்கு உயர்த்துவதாகவும், இதனால், உடலில் நீர்ச்சத்து வெற்றி போகும் அபாயம் உள்ளாதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றனர்.

Published by
லீனா

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

19 mins ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

30 mins ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

52 mins ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

54 mins ago

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…

1 hour ago

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

2 hours ago