இன்று சீனா உள்ளூர் நாட்டிலே தயாரித்த பீடோ ஊடுருவல் செயற்கைக்கோள் (BeiDou Navigation Satellite System) வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது அமெரிக்காவின் குளோபல் பொசிஷனிங் சிஸ்டத்தின் (Global Positioning System) போட்டியாக இருப்பதாகவும், ஒரு பெரிய விண்வெளி சக்தியாக மாறுவதற்கு மற்றொரு படி அமையும் என கூறப்படுகிறது.
குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் செயற்கைக்கோள், அமெரிக்க இராணுவத்தால் வடிவமைக்கப்பட்டது. இந்த செயற்கைக்கோள் மூலம் மிகவும் துல்லியமான ரேடியோ சிக்னல்களை அனுப்ப உதவுகின்றது. தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிச்சாங் செயற்கைக்கோள் மையத்திலிருந்து இன்று காலை லாங் மார்ச் -3 பி ஏவுகணை மூலம் பீடோ ஊடுருவல் செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது.
சீன மொழியில் பீடோ என்பதன் பொருள் “பிக் டிப்பர்”( Big Dipper) பீடோ அமைப்பின் இது 55 வது செயற்கைக்கோள். இந்த செயற்கைக்கோள் முதலில் ஜூன் 16-ம் தேதி அன்று விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. ஆனால், பின்னர் விண்ணில் செலுத்துவதற்கு முன் சோதனை செய்யப்பட்டது.
சோதனையில் தொழில்நுட்ப கோளாறு இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக தான் கோளாறு சரிசெய்யப்பட்டு இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த பீடோ செயற்கைக்கோள், பிற நெட்வொர்க்குடன் இணைந்து செயல்படும், இது உலகளாவிய பயனர்களுக்கு மிக துல்லியமான வழிசெலுத்தல் நேரம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…