சாங் -5 சந்திர ஆய்வை துவங்க சீனா திட்டம் – புஜியான் மாகாணத்தின் தலைநகர் புஜோவில் மாநாடு!

Default Image
சீனா சாங் -5 எனும் சந்திர ஆய்வை துவங்க புஜியான் மாகாணத்தின் தலைநகர் புஜோவில் நடைபெற்ற மாநாட்டில் திட்டமிட்டுள்ளது
சீனாவின் புஜியான் மாகாணத்தில் தலைநகரான புஜோவில் 2020 ஆம் ஆண்டுக்கான சீன விண்வெளி மாநாடு நடைபெற்று உள்ளது. தற்போது சீனாவில் சாங் 5 ஆய்வு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, இதன்படி செப்டம்பர் 21-ஆம் தேதி வரை திட்டமிட்டு, விரைவில் சாங் 5 ஆய்வு நிலவில் மென்மையாக தரை இறங்கி அங்குள்ள மாதிரிகளை மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் என மூத்த ஆராய்ச்சியாளர் யூ அவர்கள் தெரிவித்துள்ளார். தற்போது சீனா 3 கட்டங்களாக சோதனைகளை நடத்தி வருகிறது. அதாவது சுற்றுப்பாதை, தரை இறக்கம் மற்றும் திரும்புதல் ஆகியவற்றை திட்டமிட்டுள்ளது. இதில் இரண்டு கட்டங்கள் வெற்றி அடைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர் யூ அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆய்வுகளில், மாதிரிகளை சேகரித்தல் சந்திரனில் இருந்து பூமிக்கு புறப்படுதல், சந்திர சுற்றுப்பாதையில் சந்தித்து கொள்ளுதல் மற்றும் பூமியின் வளிமண்டலத்தில் அதிவேக மறுவாழ்வு ஆகியவற்றையும் உணரும் என எதிர்பார்க்கப்படுவதாக யூ அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு சீனாவின் விண்வெளி வரலாற்றில் முன்னேற்றங்களைக் கொண்டுவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மனிதர்களால் இயங்கக்கூடிய ஆராய்ச்சியில் மேம்பாட்டை கொண்டு வருவதற்காக தற்போது சீனா மேலும் சரிபார்ப்பு ஆய்வுகளை நடத்தி வருகிறது, மனிதர்கள் சந்திரனில் தரை இறங்குவதற்கு ஆளில்லாத ஆராய்ச்சி நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த மாநாட்டில் சீன சொசைட்டி மற்றும் சீன விண்வெளி அறக்கட்டளை ஆகியவை இணைந்து உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்