ஐ.நா கொடுத்த காலத்துக்கு முன்பே சீனா வறுமையை ஒழித்து சாதனை படைத்து விட்டது – சீன அதிபர்!

Published by
Rebekal

ஐ.நா கொடுத்த காலத்துக்கு முன்பதாகவே சீனா வறுமையை ஒழித்து சாதனை படைத்து விட்டது என அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் முழுமையாக வறுமை ஒழக்க போராடியவர்கள் மற்றும் நாட்டில் வறுமையை ஒழித்து சாதனை புரிந்தவர்களுக்கும் விருது மற்றும் பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்களும் கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர் சீனாவில் கடந்த 40 ஆண்டுகளாக நடந்த போராட்டத்தின் மூலம் வறுமையை ஒழித்து தற்பொழுது வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து ஏழை மக்களையும் வறுமையில் இருந்து மீட்டு உள்ளதாகவும், இதனால் 170 மில்லியன் மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வறுமைக்கு எதிரான போராட்டத்தில் முழுமையான வெற்றியை சீன கண்டுள்ளது என தெரிவித்துள்ள அவர், 2030ஆம் ஆண்டுக்குள் சீனா வறுமையை ஒழிக்க வேண்டும் என ஐநா தங்களுக்கு காலக்கெடு நிர்ணயித்தது. ஆனால் ஐநாவின் காலக்கெடுவுக்கு 10 ஆண்டுகள் முன்னதாகவே வறுமையை ஒழித்து தாங்கள் புது சரித்திரம் படைத்து அதிசயத்தை நிகழ்த்தி உள்ளதாகவும் அதிபர் ஜி ஜின்பிங் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

4 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

4 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

4 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago