ஐ.நா கொடுத்த காலத்துக்கு முன்பதாகவே சீனா வறுமையை ஒழித்து சாதனை படைத்து விட்டது என அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் முழுமையாக வறுமை ஒழக்க போராடியவர்கள் மற்றும் நாட்டில் வறுமையை ஒழித்து சாதனை புரிந்தவர்களுக்கும் விருது மற்றும் பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்களும் கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர் சீனாவில் கடந்த 40 ஆண்டுகளாக நடந்த போராட்டத்தின் மூலம் வறுமையை ஒழித்து தற்பொழுது வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து ஏழை மக்களையும் வறுமையில் இருந்து மீட்டு உள்ளதாகவும், இதனால் 170 மில்லியன் மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வறுமைக்கு எதிரான போராட்டத்தில் முழுமையான வெற்றியை சீன கண்டுள்ளது என தெரிவித்துள்ள அவர், 2030ஆம் ஆண்டுக்குள் சீனா வறுமையை ஒழிக்க வேண்டும் என ஐநா தங்களுக்கு காலக்கெடு நிர்ணயித்தது. ஆனால் ஐநாவின் காலக்கெடுவுக்கு 10 ஆண்டுகள் முன்னதாகவே வறுமையை ஒழித்து தாங்கள் புது சரித்திரம் படைத்து அதிசயத்தை நிகழ்த்தி உள்ளதாகவும் அதிபர் ஜி ஜின்பிங் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…