சீனா வெளியுறவு அமைச்சகம் ஆனது கால்வன் பள்ளத்தாக்கை மீண்டும் உரிமை கோரி நள்ளிரவில் அறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
லடாக் கிழக்கில் கால்வன் பள்ளத்தாக்கு உள்ளது இந்த பகுதி முழுவதும் எங்களுக்கு தான் சொந்தம் என சீனா மீண்டும் உரிமை கோரி இந்தியாவுடன் மல்லுக்கு நிற்கிறது.
கால்வன் (கல்வான் அல்லது கல்வன்) இப்பள்ளத்தாக்குப் பகுதி இந்தியாவின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அமைந்துள்ளது. ஆனால் இப்பகுதியை தற்போது சீனா திடீரென உரிமை கோரி அங்கு பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தி வருகிறது.
பதற்றம் நிலவி அது மோதலாக மாறியது அந்த மோதலில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.அதே போல் 43 சீனா வீரர்கள் கொல்லப்பட்டனர்.கொல்லப்பட்டனர்.சீனாவின் அத்துமீறிய தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பு முயற்சிக்கு எதிராக ஒட்டுமொத்த தேசமும் கடும் கோபத்தில் உள்ள நிலையில் இந்த விவகாரத்தில் மேலும் எரிச்சலை ஏற்படுத்தும் விதமாக டெல்லியில் உள்ள சீனா தூதரகம் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை நள்ளிரவில் வெளியிட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில் ஜூன் 6-ந் தேதி இந்திய ராணுவ வீரர்களே எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை தாண்டினார்கள் என்றும் மேலும் அவர்கள் தான் சீனா வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டி உள்ளது.
மேலும் தன் அறிக்கையில் கூறியுள்ள சீனா ஜூன் 15-ந் தேதியும் இந்திய ராணுவ வீரர்களே அத்துமீறி எங்கள் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதனால் தான் இருதரப்பிலும் உயிர் சேதங்கள் ஏற்பட்டதாக அதில் கூறியுள்ளது. அத்துடன் அந்த அறிக்கையில் ஒட்டுமொத்த கால்வன் பள்ளத்தாக்கு பகுதியுமே சீனாவுக்கே உரிமை என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்த பகுதியில் சீனா ராணுவத்தினர் பல ஆண்டுகாலமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் சீனா தன் அறிக்கையில் கூறியுள்ளது.நள்ளிரவில் சீனாவில் இருந்து பறக்கவிடப்பட்ட இந்த அறிக்கையானது நாட்டு மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…