சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய பகுதியில் லூடிங் கவுண்டி பகுதியில் இன்று (திங்கள்) மதியம் 12.55 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்துவிழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.8 என பதிவாகியுள்ளது. இந்த இடர்பாடுகளில் சிக்கி பலர் பாதிப்பாடைந்துள்ளனர்.
இதுவரை இடர்பாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 21ஆக உள்ளது. இந்த நிலநடுக்கமானது மேலும் சில பகுதிகளில் உணரப்பட்டது. அதனால், மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரவேண்டாம் என சீன அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இடர் பாடுகளில் சிக்கிய மக்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடத்திற்கு மீட்பு படையினர் மூலம் காப்பாற்றப்பட்டு வருகின்றனர். இந்த நிலநடுக்கம் சுமார் 200 கிமீ தொலைவு வரையில் உணரப்பட்டுள்ளது.
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சினை பெரிய அளவில் பேசுபொருளாகி தற்போது மெல்ல மெல்லக்…
சென்னை : ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 4-வது போட்டியாக நேற்று நியூசிலாந்து மகளிர் அணியும் இந்திய மகளிர்…
கரூர் : குளித்தலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் சங்கீதா என்பவர் சில நாட்களுக்கு…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக,…
சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…