#Breaking : சீனாவில் சகதிவாய்ந்த நிலநடுக்கம்.! 21 பேர் உயிரிழப்பு.!  

Default Image

சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். 

சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய பகுதியில் லூடிங் கவுண்டி பகுதியில் இன்று (திங்கள்) மதியம் 12.55 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்துவிழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.8 என பதிவாகியுள்ளது. இந்த இடர்பாடுகளில் சிக்கி பலர் பாதிப்பாடைந்துள்ளனர்.

இதுவரை இடர்பாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 21ஆக உள்ளது. இந்த நிலநடுக்கமானது மேலும் சில பகுதிகளில் உணரப்பட்டது. அதனால், மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரவேண்டாம் என சீன அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இடர் பாடுகளில் சிக்கிய மக்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடத்திற்கு மீட்பு படையினர் மூலம் காப்பாற்றப்பட்டு வருகின்றனர். இந்த நிலநடுக்கம் சுமார் 200 கிமீ தொலைவு வரையில் உணரப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்