கொரோனா எவ்வாறு பரவியது என்பது குறித்து ஆய்வு நடத்த உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் குழு சீனா புறப்படவுள்ள நிலையில், அவர்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
சினாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், கொரோனா பரவல் குறைய தொடங்கியது. சில நாடுகளில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தொடங்கியதை தொடர்ந்து, இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வந்தது. தற்பொழுது பிரிட்டனில் புதிய வகையான கொரோனா பரவத் தொடங்கியது.
மேலும், கொரோனா பரவலுக்கான காரணம் குறித்து உலக சுகாதார அமைப்பு, ஜனவரி மாதம் சீனாவில் ஆய்வு நடத்தவுள்ளதாகவும், அதற்காக பிரத்தேயகமாக குழு ஒன்றினை உருவாகியுள்ளதாகவும், அந்த குழு கொரோனா தொற்று எங்கிருந்து உருவானது? எப்படி உருவானது? உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தவுள்ளதாக அண்மையில் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.
அதுமட்டுமின்றி, இந்த ஆய்விற்கு சீன அரசு அனுமதி வழங்கியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் சீனா புறப்படுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகளை சீனாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ளது. மேலும், சீனாவுக்குள் நுழைய விசா வழங்காமல் அந்நாட்டு அரசு தாமதித்து வருகிறதாகவும் கூறப்படுகிறது.
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…