கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த, உலக சுகாதார நிறுவன குழுவின் அங்கமாக இருக்கும், அமெரிக்க வல்லுநர்களையும் அனுமதிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது. சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசால், தொழில், வர்த்தகம் பாதிக்கப்பட்டு பங்குசந்தைகளின் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இதனிடையே சீன தொடர்பாக தேவையற்ற பயண கட்டுப்பாடுகளை முதலில் விதித்தது. பின்னர் தங்கள் நாட்டில் இருப்பவரை முதன் முதலில் மீட்டு சென்றது ஆகியவற்றின் மூலம் அமெரிக்கா தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி பரப்புவதாக சீன அரசு குற்றம்சாட்டத்தினர்.
இந்நிலையில், கொரானா வைரஸ் தொடர்பாக ஆய்வு செய்யவும், வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தவும், உலக சுகாதார நிறுவனத்தின் குழு சீனா செல்கிறது. இந்த குழுவில் அமெரிக்க வல்லுநர்கள் இடம்பெறுவதாகவும், இதற்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளதாகவும், வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதனிடையே சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வரை கொரோனா வைரஸ் பெய்ஜிங், ஷாங்காய், ஹூபே போன்ற பல நகரங்களில் பரவுள்ளது. கொரோனா வைரசால் பலியானோர்களின் எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல இந்த வைரசால் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக சீனா அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…