கொரோனா குறித்தா? அதிமுக குழப்பம் குறித்தா? இன்று ஆளுநரை சந்திக்கும் இபிஎஸ்

Published by
Kaliraj

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிச்சாமி இன்று சந்திக்கிறார்.கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்கிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையானது கடந்த மார்ச்.,24ந் தேதி முதல் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு செப்.30-ம் தேதியோடு 8 கட்ட ஊரடங்குகள் முடிவடைந்தது. அக்.1ந்தேதி 9ம் கட்டமாக சில தளர்வுகளுடன் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டது.

இதன்படி கடந்த செப்.,1 தேதியுடன் இ-பாஸ் முறையானது ரத்து செய்யப்பட்டது, பேருந்து போக்குவரத்துக்கும் அனுமதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு  தற்போது அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் ஆயிரத்துக்கு கீழாக குறைந்திருந்தத் தொற்று கடந்த 10 நாட்களாக ஆயிரத்துக்கும் மேலாக அதிகமாகி வருகிறது.

இந்த பாதிப்பை குறைக்கும் வகையில், பரிசோதனைகளை அதிகரித்தல், மூத்த குடிமக்கள், இணை நோய்கள் உள்ளவர்களுக்கு பரிசோதனை முடிவுகளில் முன்னுரிமை அளித்தல் போன்ற  பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில், ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தை முதல்வர் பழனிச்சாமி இன்று மாலை சந்திக்க உள்ளார்.

கொரோனா பாதிப்புக்கு ஏற்பட்ட நாளிலிருந்து அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை அளித்து, தொடர் நடவடிக்கைகள் குறித்து விளக்கமும் அளித்து வருகிறார். இந்த வகையில் இன்று ஆளுநரை முதல்வர் சந்திக்க உள்ளார்.இந்த சந்தப்பில்  வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழக சட்டம் -ஒழுங்கு தொடர்பான அறிக்கையும் அளிப்பார் என்றுத் தெரிகிறது.மேலும் முதல்வருடன், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலை மைச் செயலர் கே.சண்முகம் மற்றும் டிஜிபி ஜே.கே.திரிபாதி ஆகியோரும் இச்சந்திப்பில் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிச்சாமி இன்று சந்திப்பது கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தா? அல்லது அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் குறித்தா? என்று அரசியல் விமர்சகர் நோக்குகின்றனர்.

 
 

 

Recent Posts

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

22 mins ago

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

1 hour ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

2 hours ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

2 hours ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

2 hours ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

11 hours ago