சார்பட்டா நான் நடிக்க வேண்டிய படம் என்று நடிகர் அட்டகத்தி தினேஷ் கூறியுள்ளார்.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த ஜூலை 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை துஷ்ரா விஜயன் நடித்திருந்தார். கலையரசன், பசுபதி, ஜான், ஷபீர் கல்லரக்கல் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விர்சனத்தை பெற்று ரசிகர்கள் மட்டுமின்றி, பல சினிமா பிரபலங்கள் படக்குழுவை பாராட்டினார்கள்.
இந்த நிலையில், நடிகர் தினேஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சார்பட்டா படம் பற்றி சுவாரசிய விஷயங்களை பேசியுள்ளார். அதில் பேசிய அவர் “அட்டகத்தி படத்திற்கு பிறகு நான்தான் சார்பட்டா பண்ணவேண்டியது. மெட்ராஸ் படத்திற்கு முன்பே அதுக்குத்தான் நாங்க ரெடி ஆனோம். ஆனால் முடியவில்லை எனக்கும் பா.ரஞ்சித்திற்கும் இயற்கையாகவே அது அமையவில்லை. படம் வெளியான பிறகு நானே பன்னிருக்கலாமேன்னு தோணுச்சி. வருத்தம் எதுவும் இல்லை படம் வெளியானது மிகவும் எனக்கு சந்தோஷம் ” என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…