இந்தியாவில் சீனா முதலீடா??

Published by
kavitha

இந்தியா- சீன ஆகிய இரு நாட்டு  ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இச்சம்பவம் நாடு முழுதும் கொதிக்க வைத்தது.மேலும் இந்திய  எல்லைப் பகுதியை  பதற்றமானதாக  மாற்றியது சீனா இதன் காரணமாக அந்நாட்டு மீதும் அந்நாட்டு பொருட்கள் மீதும் மக்களிடையே கடுமையான எதிர்ப்பு நிலவி வந்த நிலையில் சீனாவை சேர்ந்த, 59 மொபைல் செயலிகளுக்கு அதிரடியாக மத்திய அரசு தடை விதித்தது மட்டுமின்றி இந்தியர்கள் புதிய செயலிகளை உருவாக்க வாய்ப்பையும்,இதற்கு பரிசுத்தொகை என்ற ஊக்கத்தொகையாக  ரூ.20 லட்சத்தை அறிவித்தது.

இந்நிலையில், இந்தியாவில் சீனா நிறுவனங்கள் முதலீடு செய்ய  முன்வந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் இதுகுறித்து, மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் கடந்த ஏப்ரல் மாதம், முதலீடு செய்வதற்கான விதிமுறைகள்  அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டது.

அதன்படி, அண்டை நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பினால் அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் மிக அவசியமாகும். புதிய அல்லது கூடுதல் நிதி முதலீடுகளுக்கும், இந்த விதிமுறைகள் பொருந்தும் என்று தெரிவித்த அவர் இந்தியாவில் முதலீடு செய்ய, சீன நிறுவனங்கள்  50 முதலீட்டு பரிந்துரைகளை முன்வைத்து உள்ளது.

முதலீடு தொடர்பாக சீன நிறுவனங்கள் முன்வைத்தாலும் இந்திய – சீனா இடையிலான பிரச்னையால், இப்பரிந்துரைகள்  அனைத்தும் கிடப்பில் வைக்கப்பட்டு உள்ளன. இவற்றை பரிசீலிப்பது குறித்து, ஆலோசனை நடத்தி வருகிறோம். மேலும் இவ்விஷயத்தில் மிக கவனமாக  செயல்பட்டு வருகிறோம் என்று கூறினார்.

Published by
kavitha

Recent Posts

பாகிஸ்தான் ரயில் தாக்குதல்! 100 ராணுவ வீரர்கள் கொலை? BLA-வின் அடுத்த எச்சரிக்கை!

பாகிஸ்தான் ரயில் தாக்குதல்! 100 ராணுவ வீரர்கள் கொலை? BLA-வின் அடுத்த எச்சரிக்கை!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுடன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 9 பெட்டிகளில் சுமார்…

28 minutes ago

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…

10 hours ago

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

11 hours ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

12 hours ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

13 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

14 hours ago