போர்???#அடுத்தடுத்த ஆப்பு_ஆமெரிக்கா-சீண்டி விட்டீர்கள்!சீறும் சீனா!

Published by
kavitha

அடுத்தடுத்து நெருக்கடி கொடுக்கும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மறைமுக போரை துவக்க சீனா திட்டமிட்டுள்ளதாக சர்வதேச தகவல் வெளியாகியுள்ளது.

சீன துாதரக அலுவலகங்களை எல்லாம் மூடுமாறு அமெரிக்கா முடுக்கி விட்டதை அடுத்து பதிலடி கொடுக்க நடவடிக்கையில் சீனாவும் இறங்கி உள்ளது.

‘கொரோனா வைரஸ் பற்றிய தகவலை  உலகிற்கு முன் கூட்டியே தெரிவிக்காமல் சீனா மறைத்து விட்டதாகவும் அதனால் தான், அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் பிடியில்  பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றது என்று சீனா மீது, அமெரிக்கா  குற்றம் சாட்டி வருகிறது.அமெரிக்காவின் குற்றச்சாட்டிற்கு சீனா கடும் மறுப்பு தெரிவித்து வருகிறது.

மேலும் இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்தது. இதன் தொடர்ச்சியாகவே தென் சீன கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருவதை தடுக்கின்ற வகையில், தனது 2போர் கப்பல்களை  அமெரிக்கா அங்கு அனுப்பி வலம் வரவைத்தது.

இந்நிலையில்  ஹூஸ்டன் நகரில் செயல்பட்ம்  சீன துாதரக அலுவலகத்தை எல்லாம் அமெரிக்கா அதிரடியாக மூடியது. மேலும் அமெரிக்க மக்களின் அறிவுசார் சொத்துரிமை, தனிப்பட்ட ரகசியங்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக எடுக்கப்பட்டது என்று அமெரிக்கா அறிவித்தது.

இதனிடையே அங்கு விஞ்ஞானி தலைமறைவு , அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள சீன துாதரக அலுவலகத்தில், சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானியான டாங் ஜுவான் பதுங்கி உள்ளதாகவும், அவருக்கு சீன ராணுவத்துடன் மிக நெருங்கிய தொடர்பு உள்ளதாக, திடுக்கிடும் தகவலை அமெரிக்கா கூறி வருகிறது..டாங் ஜுவான், சீன ராணுவத்துடன் தனக்கு இருக்கும் தொடர்பை மறைத்து,விசா மோசடி செய்து பெற்றதும், தற்போது அவர் தலைமறைவாகி உள்ளதாக  அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தலைமறைவாகிய இவர் அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை திருடும் மற்றும் உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஒரு தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர். இதனால் மூடு விழா தொடரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதோடு இது குறித்து அவர் கூறுகையில்:கொரோனா வைரஸ் போன்ற பல விஷயங்களில், சர்வதேச சமூகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ள சீனாவுக்கு எதிராக, கடும் நடவடிக்கைகள் இனியும் தொடரும். ஹூஸ்டனில் செயல்பட்டு வந்த சீன துாதரக அலுவலகத்தை மூடுவதற்கு ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டது.அடுத்ததாக, அமெரிக்காவின் மற்ற நகரங்களில் உள்ள சீன துாதரக அலுவலகங்கள் எல்லாம் மூடப்படும்.

அமெரிக்க மக்களின் அறிவுசார் சொத்துரிமை, தனிப்பட்ட ரகசியங்களை பாதுகாக்கும் விதமாகவே இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து தொடரும். என்று அதிரடியாக கூறினார்.

அமெரிக்காவின்  அடுத்தடுத்த அதிரடியான இந்த அதிரடி நடவடிக்கைகள் எல்லாம் சீனாவிற்கு கடும் கோபத்தை கோப்பளிக்க செய்துள்ளது.இதனால் அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கு மறைமுக போரை துவக்க சீனா தயாராகி வருவதாக, சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.

Published by
kavitha

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

9 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

14 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

15 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

15 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

15 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

15 hours ago