கொரோனோவை வைத்து சீனா தாக்குதல்-அமெரிக்கா செனட் செக்!

Published by
kavitha

உலக நாடுகள்  அனைத்தும் கொரோனா வைரஸ் மீது கவனம் செலுத்தி வருகின்ற  நிலையில், இதனைப் பயன்படுத்தி, சீனா தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க செனட் உறுப்பினர் ஜிம் இன்ஹோப் சீனா மீது குற்றஞ்சாட்டி உள்ளார்.

அமெரிக்க செனட் உறுப்பினர் ஜிம் இன்ஹோப், சீனாவை  கடுமையாக விமர்சித்து நேற்று கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, உலக நாடுகள் பலகட்ட முயற்சிகளை எல்லாம் எடுத்து வருகிறது. ஆனால் அந்நாடுகள் மீது  சீனா கொடூரமாக பல தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.

மேலும்  இந்தியாவில், ராணுவ வீரர்கள், 20 பேரை கொன்று, சீன ராணுவம் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறது. சர்ச்சைக்குரிய தென் சீன கடல் பகுதியை உரிமை கொண்டாடும், தைவான், மலேஷியா, வியட்நாம், இந்தோனேஷியா  போன்ற நாடுகளை ஆத்திரமூட்டும் வகையில்  அந்நாடுகளுக்கு எதிராக சீனா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரு  நாடுகளும் ராணுவத்தில் அதிகம் முதலீடு செய்கின்றன. இதன்மூலம், அவர்களின் ராணுவ திறன் மேம்பட்டுள்ளது. இதில் இவ்விரு நாடுகளும், ஆக்ரோஷமாக வளர்ந்து வருகின்றது. அமெரிக்காவை வீழ்த்தவேண்டும் என்று சீனா முயற்சி எடுத்து வருகிறது;ஆனால் அது நடக்காத காரியம். உலகின் மிக வலிமையான ராணுவம் எங்களிடம் தான் உள்ளது. அதை எங்கள் எதிரிகள், முதலில் உணர வேண்டும் என்று சீனா,ரஷ்யாவிற்கு பகிரங்கமாக  எச்சரிக்கை விடுக்கும் விதத்தில்  அவருடைய பேச்சு அமைந்தது .

 

Published by
kavitha

Recent Posts

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

56 minutes ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

2 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

3 hours ago

ஐயோ!! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்ன ஆச்சு? திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி.!

சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…

5 hours ago

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

18 hours ago

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

19 hours ago