கொரோனா தடுப்பூசி போடாதவர்களின் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் – பாகிஸ்தான் அரசு!

Published by
Rebekal

கொரோனா தடுப்பூசி போடாதவர்களின் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் என பாகிஸ்தான் அரசு எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் தாக்கம் தற்போதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா மிக வேகமாக பரவி வரும் நிலையில், பல நாடுகளில் இதன் காரணமாக கொரோனா மூன்றாம் மற்றும் நான்காம் அலைகள் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவது மட்டுமே ஒரே ஆயுதம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

எனவே, பல்வேறு நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சில நாடுகளில் தடுப்பூசி செலுத்துபவர்களை ஊக்குவிக்கும் வகையில் இலவச சலுகைகள் வழங்கப்படுவதுடன், தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு சில எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் பாகிஸ்தானிலும் கொரோனா பரவல் சற்று அதிகரித்து வருவதால், மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், தடுப்பூசி செலுத்தாதவர்களின் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் அலுவலகங்கள் வருவதற்கும், சம்பளம் பெறுவதற்கும் அனுமதி இல்லை எனவும், உணவகங்கள், ஷாப்பிங் மால்களில் இவர்களுக்கு தடை விதிக்கப்படும் எனவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. எனவே பாகிஸ்தானில் உள்ள மக்கள் பலரும் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர் .

Published by
Rebekal

Recent Posts

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

8 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

29 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

31 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

1 hour ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

1 hour ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

2 hours ago