பிரபலங்கள், அரசியல் தலைவர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஷ்வர் என்ற இளைஞரை மனநல மருத்துவமனையில் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.
சென்னை திருவான்மியூரில் உள்ள நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக நேற்று காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. இதனை தொடர்ந்து மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள் அஜித் வீட்டிற்கு சென்று சோதனை செய்யப்பட்டது ஆனால், வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அது வெறும் வதந்தி என தெரிய வந்தது.
இந்த நிலையில் அந்த மர்ம நபர் குறித்து கால்துறையினர் விசாரணை செய்ததில், அந்த நபர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஷ்வர் என்றும் அவர் மனநிலை சரியில்லாதவர் என்றும் தெரிய வந்துள்ளது.
இதற்கு முன் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனி சாமி, நடிகர் ரஜினி, நடிகர் சூர்யா ஆகியோர் வீட்டிற்கு வெடிக்குண்டு மிரட்டல் கொடுத்தவர் என்றும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கும் புவனேஷை மனநல மருத்துவமனையில் சேர்க்க முடிவு செய்துள்ளதாக மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…