பூக்களின் மீது நடந்து சென்றதால் பிரபல நடிகையின் மீது வழக்கு பதிவு.!

Published by
Ragi

பூக்களின் மீது நடந்து சென்றதால் நடிகை ரோஜா  மீது வழக்கு திடீர் வழக்கு பதிவு.

தமிழ் சினிமாவில் 90ஸில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானவர் ரோஜா. இவர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோகளுடன் நடித்துள்ளார்.இயக்குனர் ஆர். கே. செல்வமணியின் மனைவியான இவர் ஆந்திரா மாநிலத்தில் உள்ள நகரி என்ற தொகுதியின் எம். எல். ஏ மற்றும் ஓய்.எஸ்.ஆர் என்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆவர். தற்போது ரோஜா கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தனது தொகுதியில் உள்ள பலருக்கு உணவுகளை வழங்குவதும், அவரே முன்னிறங்கி கிருமிநாசினி தெளிப்பது போன்ற பல உதவிகளை தனது தொகுதி மக்களுக்கு செய்து வருகிறார். இருப்பினும் இவர் தனது தொகுதியில் உள்ள குடிநீர் குழாய் ஒன்றை திறந்து வைக்க செல்கையில்,  அவரை பூக்களை தூவி வரவேற்று பூக்களின் மீது நடந்து சென்றுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி பலரும் இந்த கொரோனா ஊரடங்கு நெருக்கடி சூழலில் இதுபோ‌ன்ற ஆடம்பரம் எதற்கு என்று கூறி கண்டனம் தெரிவித்து வந்தனர்

இந்த நிலையில் இதனை குறித்து வழக்கு ஒன்றை பதிவு செய்து, பூக்களின் மீது நடந்து சென்ற வீடியோவையும் ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் வழக்கறிஞரான கிஷோர். தற்போது இதன் வழக்கு இன்று காலை நடைப்பெற்ற போது, இதனை குறித்து விளக்கம் அளிக்க கோரி ரோஜாவிற்கு ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.. தற்போது இந்த விவாகாரம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Published by
Ragi

Recent Posts

வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!

வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!

காஷ்மீர் : பஹல்காமில் 6 நாட்களுக்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புதிய காணொளி ஒன்று  வெளியாகியுள்ளது.…

40 minutes ago

தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!

டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…

2 hours ago

“மக்களுக்காக பணியாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு” -அமைச்சர் மனோ தங்கராஜ் நெகிழ்ச்சி!

சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…

2 hours ago

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

10 hours ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

11 hours ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

11 hours ago