பூக்களின் மீது நடந்து சென்றதால் பிரபல நடிகையின் மீது வழக்கு பதிவு.!

Published by
Ragi

பூக்களின் மீது நடந்து சென்றதால் நடிகை ரோஜா  மீது வழக்கு திடீர் வழக்கு பதிவு.

தமிழ் சினிமாவில் 90ஸில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானவர் ரோஜா. இவர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோகளுடன் நடித்துள்ளார்.இயக்குனர் ஆர். கே. செல்வமணியின் மனைவியான இவர் ஆந்திரா மாநிலத்தில் உள்ள நகரி என்ற தொகுதியின் எம். எல். ஏ மற்றும் ஓய்.எஸ்.ஆர் என்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆவர். தற்போது ரோஜா கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தனது தொகுதியில் உள்ள பலருக்கு உணவுகளை வழங்குவதும், அவரே முன்னிறங்கி கிருமிநாசினி தெளிப்பது போன்ற பல உதவிகளை தனது தொகுதி மக்களுக்கு செய்து வருகிறார். இருப்பினும் இவர் தனது தொகுதியில் உள்ள குடிநீர் குழாய் ஒன்றை திறந்து வைக்க செல்கையில்,  அவரை பூக்களை தூவி வரவேற்று பூக்களின் மீது நடந்து சென்றுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி பலரும் இந்த கொரோனா ஊரடங்கு நெருக்கடி சூழலில் இதுபோ‌ன்ற ஆடம்பரம் எதற்கு என்று கூறி கண்டனம் தெரிவித்து வந்தனர்

இந்த நிலையில் இதனை குறித்து வழக்கு ஒன்றை பதிவு செய்து, பூக்களின் மீது நடந்து சென்ற வீடியோவையும் ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் வழக்கறிஞரான கிஷோர். தற்போது இதன் வழக்கு இன்று காலை நடைப்பெற்ற போது, இதனை குறித்து விளக்கம் அளிக்க கோரி ரோஜாவிற்கு ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.. தற்போது இந்த விவாகாரம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Published by
Ragi

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

11 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

19 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 days ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 days ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 days ago