பூக்களின் மீது நடந்து சென்றதால் பிரபல நடிகையின் மீது வழக்கு பதிவு.!

Default Image

பூக்களின் மீது நடந்து சென்றதால் நடிகை ரோஜா  மீது வழக்கு திடீர் வழக்கு பதிவு.

தமிழ் சினிமாவில் 90ஸில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானவர் ரோஜா. இவர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோகளுடன் நடித்துள்ளார்.இயக்குனர் ஆர். கே. செல்வமணியின் மனைவியான இவர் ஆந்திரா மாநிலத்தில் உள்ள நகரி என்ற தொகுதியின் எம். எல். ஏ மற்றும் ஓய்.எஸ்.ஆர் என்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆவர். தற்போது ரோஜா கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தனது தொகுதியில் உள்ள பலருக்கு உணவுகளை வழங்குவதும், அவரே முன்னிறங்கி கிருமிநாசினி தெளிப்பது போன்ற பல உதவிகளை தனது தொகுதி மக்களுக்கு செய்து வருகிறார். இருப்பினும் இவர் தனது தொகுதியில் உள்ள குடிநீர் குழாய் ஒன்றை திறந்து வைக்க செல்கையில்,  அவரை பூக்களை தூவி வரவேற்று பூக்களின் மீது நடந்து சென்றுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி பலரும் இந்த கொரோனா ஊரடங்கு நெருக்கடி சூழலில் இதுபோ‌ன்ற ஆடம்பரம் எதற்கு என்று கூறி கண்டனம் தெரிவித்து வந்தனர்

இந்த நிலையில் இதனை குறித்து வழக்கு ஒன்றை பதிவு செய்து, பூக்களின் மீது நடந்து சென்ற வீடியோவையும் ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் வழக்கறிஞரான கிஷோர். தற்போது இதன் வழக்கு இன்று காலை நடைப்பெற்ற போது, இதனை குறித்து விளக்கம் அளிக்க கோரி ரோஜாவிற்கு ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.. தற்போது இந்த விவாகாரம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்