இன்னும் அந்த பட ஷூட்டிங்கே முடியல அதுக்குள்ள அடுத்த படமா.?! ஜெயம்ரவியின் பலே திட்டம்.!

Default Image

நடிகர் ஜெயம் ரவி ரவி தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 30- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் அஹமத் இயக்கத்தில் ஜனகன மன மற்றும் அகிலன் ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இதில் ஜன கன மன படத்தை இயக்குனர் அஹ்மத் இயக்குகிறார்.  படத்தில் நடிகர் அர்ஜுன் நடிகை டாப்ஸி, ராதிகா சரத்குமார் என பலர் நடிக்கின்றார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஹாலிவுட் அளவிற்கு சண்டைக்காட்சி இடம்பெறும் என்பதால் ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்கள் இந்த படத்தில் பணியாற்றிவருகிறார்கள்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு எடுக்க வெளிநாடுகள் செல்லவேண்டி இருப்பதால், படம் எடுத்து முடிக்க நீண்ட நாட்கள் ஆகும் என்பதால் இதற்கிடையில், மீண்டும், இயக்குனர் அஹ்மத்திடம் கதைக்கேட்டுள்ளாராம் அந்த கதையும் ஜெயம்ரவிக்கு பிடித்துவிட்டதால் அப்படத்திற்கு தயாராகி வருகிறாராம். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்